Notifications
Clear all

கதை முன்னோட்டம்

 
Admin
(@ramya-devi)
Member Admin

கதை - என் மௌனங்கள் உடைந்தது நமக்காக

தலைவன் - சர்வேஷ்வரன்

தலைவி - சகி

 

கதை முன்னோட்டம்

தன் முன் கூனின்றி நிமிர்ந்து நின்றிருந்தவளை தரம் வாய்ந்த ரோலிங் சேரில் பணக்கார மிடுக்குடன் திமிராய் ஏமாற்றப்பட்ட வலியை உள்ளடக்கி அமர்ந்தபடி ஏளனமாக, கோபமாக, வெறுப்புடன் என எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியபடி பார்த்துக்கொண்டு இருந்தான் சர்வேஸ்வரன்.

 

தி சர்வா இண்டர்நஷனல் க்ரூப்ஸ் ஆப் கம்பெனியின் ஓனர் தான் இந்த சர்வேஸ்வரன். பணக்கார தோற்றம், எதிலும் ஒரு நேர்த்தி, எதிலும் ஒரு பெர்பெக்ஷன். பேசும் பேச்சு கூட வசதியை பார்த்து தான் அவனுக்கு உதிரும். இல்லையென்றால் ஒரு பார்வை கூட பார்க்க மாட்டான். அந்த அளவுக்கு பண திமிர் அவனிடம் இருந்தது.

 

அந்த அளவு பண மோகமும் திமிரும் அவனை கட்டிப் போட்டு இருந்தது. பிறந்ததில் இருந்து பணம் பணம் மட்டும் தான் அவனது தாரக மந்திரமாய் ஓதப்பட்டும் இருந்தது. மனித உணர்வுகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

 

பண மோகத்தில் மிதந்து இருந்தவனுக்கு இந்த கோவம் அவசியமற்றது தான். ஆனால் அவன் சந்தித்த அவமானம் அவனை விட்டு அகல மறுத்ததே. அவன் என்ன செய்வான்.

 

அத்தனை பேரின் முன்னிலும் தன்னை தலை குனிய வைத்தவளை கண்டு கட்டுக்கடங்காமல் கோவம் வந்தது. அந்த நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஓடி விட்டது என்றாலும் அதன் காயம் இன்னும் பச்சை ரணமாய் உள்ளுக்குள் புரை ஓடிப் போய் இருந்ததை அவனே அறியவில்லை.

 

இவ்வளவு நாளும் அவனது சொந்த வாழ்க்கை, பிசினெஸ் என்று ஒரு லயத்தில் ஓடிக்கொண்டு இருந்தான். ஆனால் அதை கெடுக்கும் வண்ணமாகவே இதோ அவனின் கண் முன்பு வந்து நிற்கிறாள் சகி...

 

அவளை வெட்டவா குத்தவா என்று வெறுப்போடு பார்த்துக்கொண்டு இருந்தான் சர்வேஸ்வரன். அவளோ இந்த நிகழ்வு எப்படி ஏற்பட்டது என்று தன்னையே திட்டிக்கொண்டாள்.

 

சர்வா கம்பெனி என்று தெரியும் தான். ஆனால் அவன் முன்பு வந்து தான் நிற்க நேரிடும் என்று அவளே அறியாதுப் போனாள். எத்தனையோ கடை ஊழியர்களில் ஒருவராய் தானும் இருந்துவிட்டு போகலாம் என்று தான் எண்ணினாள். ஆனால் அவளது போதாத காலமோ என்னமோ சர்வாவையே நேரில் சந்தித்து இதோ அவனின் வெட்டும் பார்வையில் சங்கடப்பட்டு நிற்கிறாள். சங்கடம் மட்டும் தான் இருந்ததே தவிர தலைகுனிய வில்லை.

 

சர்வா அவளை கூர்ந்துப் பார்த்தான். அவனது பார்வையில் எதிரில் இருந்தவள் சாம்பலாகி கொண்டிருந்தாள். நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் எல்லாம் அவன் கண்முன்னே வந்து போனது. தான் பட்ட அவமானம் அதில் எழ குமைந்து போனான்.

 

நான்கு வருடங்கள் ஆகியும் அவளால் ஏற்பட்ட அவமானத்தை மறக்கவே முடியவில்லை அவனால்.

 

ஆசை ஆசையாய் திருமணம் செய்யவில்லை என்றாலும்  ஊரு பேருக்காகவாவது திருமணம் செய்து தான் ஆகவேண்டும் என்று முடிவெடுத்து, பல வரன்களை அலசி ஆராய்ந்து சகியினை தேர்ந்தேடுத்து மணவறை வரை வந்தது.

 

இருவீட்டுக்கும் பிடித்துப் போக மேற்கொண்டு திருமணம் பேசி அதற்கு எல்லா ஏற்பாடு இனிதாக நடைபெற்றுக் கொண்டிருக்க, திருமணம் நடக்க இருக்கும் நாளன்று காலையில் எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கவில்லை என்று எழுதி வைத்துவிட்டு ஓடிப்போனாள்.

 

அப்படி ஓடிப்போனவளை இதோ இத்தனை ஆண்டுகள் கழித்து தன் முன் மீண்டும் பார்த்தான் சர்வா. பார்த்தவனுக்கு ஒரு நொடியிலே பழைய நினைவுகள் எல்லாம் அணிவகுக்க கண்களெல்லாம் சிவந்துப் போனது. அன்று திருமண மண்டபத்தில் எவ்வளவு பேச்சுக்கள். வருபவன் போறவன் முதற்கொண்டு தன்னை கேலி பேசி சிரித்தது இன்றும் கண் முன் எழ அவளை கொலை வெறியோடு பார்த்தான்.

 

சகியுமே உள்ளுக்குள் அதிர்ந்து தான் போனாள். இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் இவனை இப்படி நேருக்கு நேர் சந்திப்போம் என்று அவளுமே எதிர்பார்க்கவே இல்லை. அவளுக்குமே இது மிக பெரிய அதிர்வாகத் தான் இருந்தது.

Loading spinner

Quote
Topic starter Posted : October 19, 2025 8:38 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top